Wednesday, April 22, 2026

பாரிஸ் : 300 கிலோ பட்டாசு பறிமுதல் – மூவர் கைது

by Editor
0 comments

பாரிசின் பதினெட்டாவது வட்டத்தில் ஒரு வாகனத்திலிருந்து வாணவேடிக்கை பட்டாசுகளை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாரிசு 18-இல் உள்ள போர்ட் தெ கிளினான்கூர் (Porte de Clignancourt) பகுதியில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் ஒரு வாகனத்திலிருந்து 300 கிலோ அளவிலான வாணவேடிக்கைக்கு பயன்படுத்தப்படும் பட்டாசுகளை கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பாக மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவாசி-லெ-ருவா (Choisy-le-roi) எனுமிடத்தில் 95 பட்டாசுகளும், 400 யூரோ பணமும் கைப்பற்றப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டு குறிப்பிடத்தக்கது.

You may also like

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2026. All Rights reserved. Powered by NakshatraTech