Thursday, January 15, 2026

ஊழியர்களை மிரட்டி கடையிலிருந்த 200 செல்போன்கள் கொள்ளை

by Editor
0 comments

வணிக வளாகத்தில் உள்ள செல்போன் கடையில் ஊழியர்களை மிரட்டி 200-க்கும் மேற்பட்ட செல்போன்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

ரொனி சுபுவாவில் (Rosny-sous-Bois) உள்ள வணிக வளாகம் காலை திறக்கப்பட்டது உள்ளே நுழைந்த மூகமூடியணிந்த நான்கு பேர் கும்பல், அங்கிருந்த செல்போன் கடையில் புகுந்து செல்போன்களை கொள்ளையடித்துள்ளது.

வழக்கம்போல் கடைக்கு வந்த ஊழியர்கள் கடையில் உள்ள செல்போன்கள் திருடப்படுவதை கண்டுள்ளனர்.

ஊழியர்களை கண்ட கும்பல், கண்ணீர் புகை குண்டு குப்பிகளை காட்டி அவர்களை மிரட்டி கடைக்குள் கொண்டு சென்றது.

மேலும், கடையின் பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து அதிலிருந்த 200 செல்போன்களை திருடியுள்ளனர்.

தப்பிச்செல்லும்போது மக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

வணிக வளாகத்தில் அவசர வழியாக வெளியேறிய கும்பல் தயாராக இருந்த காரில் தப்பிச்சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech