299
ஒர்லி விமான நிலைய சரக்குகள் கையாளும் பகுதியில் உடன் பணியாற்றும் சக ஊழியரை கத்தியால் குத்தி கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணினி பிரிவு ஊழியரான 26 வயது நபர் கஞ்சாவின் போதையில் அவருடன் பணியாற்றிய 21 வயது இளைஞரின் தொண்டையில் கத்தியால் குத்தியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார்.
கொலை செய்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு மனநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.