Wednesday, April 22, 2026

காவல்துறை வாகனத்தை தாக்கிய சிறுவர் உட்பட இருவர் கைது

by Editor
0 comments

காவல்துறையினருக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் காவல் வாகனம் தாக்கப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

இச்சம்பவத்தில் பதினெட்டு வயதுக்குட்பட்ட பதின்வயது நபர் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட பதின்வயது நபரின் சிறார் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தினார்.

மற்றொருவர் கைது செய்யப்பட்டு காவல்துறை வசம் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்கு தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று ஆண்கள், ஒரு பெண், ஒரு பதின்வயதினர் ஆகியோர் அடங்குவர்.

ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றபோது கார் தி நோர் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கிய காவல்துறையினரின் கார் காரை கருப்பு உடை அணிந்த சிலர் இரும்பு தடி கொண்டு தாக்கி சேதப்படுத்தியதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதில் காரில் இருந்த மூன்று காவலர்களுக்கு கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களை திரும்ப செல்லக் கோரி அவர்களை நோக்கி துப்பாக்கியை காட்டிய காவலர் மீது நிர்வாக ரீதியிலான விசாரணை எதுவும் மேற்கொள்ளப்படாது என்று காவல்துறை தலைமை அதிகாரி லொரன் தெரிவித்துள்ளார்.

You may also like

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2026. All Rights reserved. Powered by NakshatraTech