Wednesday, April 22, 2026

இளைஞர் பலி எதிரொலி : ஒன்பது மணிக்கு மேல் பேருந்துகள் நிறுத்தம்

by Editor
0 comments

பிரான்சில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் இன்று (வியாழக்கிழமை) இரவு ஒன்பது மணிக்கு மேல் பேருந்து மற்றும் டிராம் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக இல்-தே-பிரான்சின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.

‘கலவரச்சூழலில் மக்கள் இரவு நேரத்தில் பயணிப்பது பாதுகாப்பானதல்ல. பொதுப்போக்குவரத்து வாகனங்களை தாக்குபவர்களை கைது செய்யுமாறு காவல்துறை தலைமையகத்தை கோரியுள்ளேன். நமது ஓட்டுநர்களையும், பயணிகளையும் நாம் பாதுகாக்க வேண்டும்’ என்று இல்-தே-பிரான்சின் மாநில தலைவர் வலேரி கூறியுள்ளார்.

க்ளமார் (Clamart) எனுமிடத்தில் நேற்றிரவு T6 டிராம் தீக்கிரையாக்கப்பட்டது. இதனையடுத்தே இன்று இரவு நேர போக்குவரத்து நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

You may also like

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2026. All Rights reserved. Powered by NakshatraTech