Thursday, April 30, 2026

Strasbourg: காவல்துறை கைதுக்கு பயந்து ஆற்றில் குதித்த இளைஞர்!

by Editor
0 comments

காவல்துறை துரத்தியபோது ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்ற இளைஞர் காணாமல் போனதால் காவல்துறையினர் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அவ்வழியாக தொடர்புடைய இளைஞரும், அவரின் உறவினர்கள் இருவரும் திருடப்பட்ட ஒரு காரில் வந்துள்ளனர்.

காவல்துறையினரின் வாகன சோதனையிலிருந்து தப்பிக்க அவர்கள் அனைவரும் இறங்கி ஓடியுள்ளனர்.

காவலர்களிடமிருந்து தப்பிக்க அந்த இளைஞர் அருகிலிருந்த ஆற்றில் குதித்துள்ளார்.

தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் குதித்து தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அவருடன் வந்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து நிலையில், தற்போது அவர்களை விடுவித்துள்ளனர்.

You may also like

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2026. All Rights reserved. Powered by NakshatraTech