Thursday, April 30, 2026

Saint-Brieuc: குடும்ப வன்முறை குறித்து விசாரிக்க வந்த காவலரின் கழுத்தில் கத்திக்குத்து

by Editor
0 comments

பெண்ணை தாக்கிய சம்பவம் குறித்து விசாரிக்க சென்ற காவலரை கழுத்தில் கத்தியால் குத்திய 21 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னை தன் கணவர் தாக்குவதாக பெண்ணொருவர் புகார் அளித்ததையடுத்து அங்கு காவலர்கள் விரைந்துள்ளனர். சம்பவ இடத்தில் புகாரளித்த பெண்ணை தாக்கியவரை காவலர் ஒருவர் கைது செய்ய முயலும்போது அந்நபர் காவலரின் பின் தலையிலும் கழுத்திலும் கடுமையாக தாக்கியுள்ளார். உடனடியாக விரைந்த அவசர சேவை பிரிவினர் அந்த காவலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக  குற்ற வழக்குகளில் ஏற்கனவே தொடர்புடைய 21 வயது நபரான அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மனைவியை தாக்கியதாகவும் அரசு அதிகாரியை கொலை செய்ய முயற்சித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

You may also like

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2026. All Rights reserved. Powered by NakshatraTech