Thursday, April 30, 2026

பாரிஸ் : பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு கத்திக்குத்து

by Editor
0 comments

பாரிஸ், Saint-Germain-des-Prés-யில் உள்ள Paris-Cité University-யில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Paris-Cité பல்கலைக்கழகத்தின் ஏழாவது மாடியில் மாணவி ஒருவர் நிறைய கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். நிகழ்விடத்திற்கு உடனே விரைந்த அவசர சேவை குழு அவருக்கு மருத்துவ முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கத்தியால் குத்திய நபர் Vanves-Malakoff இரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

You may also like

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2026. All Rights reserved. Powered by NakshatraTech